Posts

Showing posts from December, 2015

என்ன மர்மம்?!

Image
பயணிகள் நிறைந்த பேருந்துப் பயணத்தில்  தெளிந்த வட்டமாயிருந்த  அழகுப்பெண்ணின் முகம்! கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு  இருக்கையின்றி  நின்று கொண்டும்  தொங்கிக் கொண்டுமிருந்த சிலரின் பாவனைகள்!  நாளை உலகம் அழியும்முன்  நவீனமாய்த் தவழும்  கைப்பேசியை அறிந்துகொள்ளும் அறநோக்கோடு  அமர்ந்து வந்த சிலர்!  அத்தனை விசித்திர மனிதரையும்  அழகாய்த் தாங்கி பயணித்து  தவிக்கவிட்டு இறக்கி பயணப்பட்ட  குளிரூட்டப்பட்ட பேரூந்தென எல்லாம் நினைவுப் படுகையிலிருந்து எள்ளளவாய் மறந்து போனாலும் அசிங்கத்தை மிதித்துவிட்டு அவன் அள்ளிவந்த மணமட்டும் அம்மணமாய் இன்னும் அழியாது அலைவது என்ன மர்மம்?!

ஊழியாக்கப்பட்ட பெருமழை!

Image
கழிவறையில் அமர்ந்து  நாளிதழ் விரிக்கையில்  மழைக்காலத்திற்கு  ஊழிக்காலமென புதுப்பெயர் சூட்டி  வழிந்து கிடந்தன  கவிதைகளும் செய்திகளும்! கொஞ்சம் குளிர ஆரம்பித்திருந்த  பாலைவன நகரத்தில்  மழைபற்றிய செய்திகள்  வந்துக் குவியத் தொடங்கியபோது  குளிரையும் மீறி நனையத் தொடங்கியிருந்தது உடல்!  ஆழ்ந்த உறக்கம்  தொலைந்த பொழுதுகளில்  மேலிருந்து வீசும்  மின்விசிறிக்காற்றினை  மேக மழையாய்  நினைத்து பயந்து  முகப்புத்தகம்வழி  முகப்புச் செய்திகளை  தரிசித்து தனித்திருந்தது உடலுடைய மனம்!  மழைநீர் சாக்கடையோடு  கலந்த பொழுதுகளில்  பெற்றோரை தொலைத்த பிஞ்சின் புகைப்படம் விரிகையில்   வீடிழந்து  வெற்றுமனிதர்களாய்  சுற்றம் மொத்தம்  சுற்றும்முற்றும் அலைகையில்  முட்டிவரை நீரில்  முனங்குகின்ற வெகுசனம்  பார்க்கையில் வந்தாரை வாழவைக்கும்  வளமைப் பூமியில்  சோற்றுக்கு சண்டையிட்...