இரவுப்பூனைகள்

சத்தமில்லாத இருளில் உள் நுழைகிற பூனை உன் நினைவு பூனையின் ஒவ்வொரு அடி நகர்தலும் நம் சந்திப்பின் ஒவ்வொரு கணங்கள் இருளில் ஒளிரும் அதன் கண்கள் மட்டும் நம் காதல் அது கொட்டிக்குடித்து சிந்திய பால்குவளை நமக்குள் இன்னும் கழியா ஏக்கப் பிரியம் வயிறு உப்ப அருந்தி உறங்கும் இரவுப்பூனை நமது நிறைவேறாக் கனவின் நிழல் இரவுப்பூனைகள் நம் அகத்தின் காட்சிப்படுத்தல்.