Posts

Showing posts from March, 2023

நீயென்பது

Image
நீயென்பது  எனக்கு  உனது குரல்தான்!  வள்ளுவ குறள் போல உனது.. வரலாற்றுக் குரல் குரல் வழி  வளர்ந்த பிரியம் நமது உன் குரலின்  வெவ்வேறு அதிர்வுகளை   அது கடத்தும் உணர்வுகளையும் உன்னைவிடவும் ஆழமாய் அறிவேன்!  உன் உடல்போலன்றி குரல்  அவ்வளவு பரிட்சயமெனக்கு! உன் முகம் குறித்த  உருவம் குறித்த  கற்பனைகள்  இன்றும் உண்டு  அது அறியாமையின் வெளிப்பாடு! என் பிரியம்  உன் மீதா  உன் குரல் மீதா  என்ற தவிப்பும் இன்றும் உண்டு உன்  சுகம்  சுகவீனம்  அழுகை  கோபம்  காதல்  அமைதி  என எல்லா உணர்வுகளையும்  கடத்தும் கடத்தி  உனது குரல்  உனக்கும் அவ்வாறே! நமக்கிடையே  தொலைவு அதிகரித்ததில்  குரல் வசப்பட்டது.  நன்மையே! மொழியும், குரலும்  இல்லையெனில்  எங்கனம் சாத்தியம்  இப்பிரியப்  பேருணர்வு! எழுத்து கடந்து  குரல் வழி  அன்பு பரிமாறும் - நாம்  கடிதத்திற்க்கு முந்தைய காலம் பின்னோக்கி சென்று  முன் சேர்பவர்கள்! நீயென்பது  எனக்கு எப்பொழுதும்...

ஒருத்திகள்

Image
தினம் கனவில் வந்து   பிரியத்தின்  யாழிசைக்கிறாள் ஒருத்தி! அதிகாலை காற்றினை அவசரத்தில் கிழித்துக்கொண்டு   பயணிக்கையில்  சட்டென   கடந்து போகிறாள்  பொறுப்பான ஒருத்தி!  ஆற்றாமை  பொங்க  அழுகை முட்டுகையில்  ஆறுதல்  தலை கோதுகிறாள்  ஒருத்தி!  எத்துணை முறை  உடல் நலிகையிலும்  அத்துணை வாஞ்சையோடு  நலம் பேணுகிறாள்  ஒருத்தி! உன்னை  மிகப்பிடிப்பதாலேயே  உனதருகில்  வருவதைத் தவிர்க்கிறேன் என பேரின்பம் விதைக்கின்ற  ஒருத்தி! மழலை  மங்கை  மாதரென  எத்தனை ஒருத்திகள்  எத்தனை உணர்வுகள்  அவள்களின்றி  ஒரு அணுவும்  அவையத்தில் அசையாது!. மகளிர் தின வாழ்த்துக்கள்!