இன்றைக்கு இந்த மாலை இன்பம் அளிப்பதாக இருக்கிறது இருக்கட்டும் காரணம் நீ! அறிவாய். திட்டுவதன் மூலமும் மகிழ்விக்க முடியுமென உலக பிரியங்களின் வரலாற்றில், நமது பிரியங்களின் வரலாற்றில் ஓரு புதிய கண்டுபிடிப்பினை முழு முதலாக நீ அழுத்தமாக பதிவு செய்திருக்கிறாய். பிரியந்தோய்ந்த சிறு பிள்ளையின் இதழ் கணத்தில் விழுந்த வசவுகளில் பெருமழை பொழிந்த சுடு நிலமாய் மகிழ்ந்தேன். அன்பின் எல்லா இலக்கணங்களையும் நம் பிரியங்கொண்டு நாமே உடைப்போமே வரலாறு வணங்க! இப்போது உணர்கிறேன் உனது புகைப்படத்தை கட்டமாக சட்டம் செய்து விட்டம் உயர்ந்த வீட்டில் ஏன் மாற்றினேனென! ஆத்மாவிற்க்கு அன்றே புரிந்தது அறிவிற்கு புரிய இத்தனை காலம் எத்தனை காலம்! நீ எனக்கு புத்தருக்கு வாய்த்தது போன்ற போதிமரம் உன்னிலிருந்து பெற்ற இப்பிரியத்தின் பெரும் ஞானத்தை பேறாகக் கருதி பொற்றி, போற்றி பாதுகாப்பது எனக்கு வரலாற்றுக் கடமை! எத்துனை காலத்திற்க்குத்தான் ரோமியோ, ஜூலியட் கதைகள்!! நம் சந்ததிகள் நம் கதைகளைப் பேசட்டுமே! உன்னைப் பேசட்டுமே! உன் மெளனத்தின் ஆழ்பிரியத்தைப் பேசட்...