Posts

Showing posts from January, 2024

எல்லாவற்றுக்கும் நீதான்!

Image
இரண்டொரு நாட்களாக  கதைக்க நேரமின்றி  சொற்களின் கனத்தை சுமந்துகொண்டே அழைகிறேன் பல தினங்களாக பகிர்ந்த கவிதைகளை நீ இன்னும் படிக்கவுமில்லை பார்க்கவுமில்லை அம்மா வந்து போனது அலுவலக அங்கலாய்ப்புகள் பத்திரிக்கைகளில் படித்தது படம் இரண்டு பார்த்தது அக்கம்பக்க நிகழ்வுகள்  அந்தரங்க புலம்பல்கள் என நிகழ்வுகள்  நிரம்பி முட்டுகையில்  நேரமின்றி இருக்கிறாய் சிந்தை வெடிப்பதற்குள் சீக்கிரம் செவிமடு ஏனெனில் என் எல்லாவற்றுக்கும் காதுகளை காதலோடு  கொடுப்பவள் நீதான். 

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔

Image
வார இறுதி நாட்களில்  உன் நினைவைத் தாங்கி  சில மணிநேரம்  தனித்திருக்கிறேன் இதர நாட்களில்  சில நிமிடங்கள் பெருகும் கண்ணீரை  கனக்கும் இதயத்தை  என்ன சொல்லி  தேற்றுவதெனத்  தெரியவில்லை இதயத்திற்கு  இத்தனையருகில் - ஒரு இழப்பை  துயரத்தினை வலியை  நான் சந்தித்ததேயில்லை நிறைய நல் நினைவுகளை  தந்த நீ இதையும் தந்து  போயிருக்கிறாய் உனது அருகாமை இதயத்தினை இலேசாக்கும் எப்போதும் முதன் முறை உனது இல்லாமை கணமாக்கியிருக்கிறது ஒளிரும்  உனது கண்களை  நெருப்புக்கு  தின்னக் கொடுத்துவிட்டு  இருளில்  அலைகிற, அழுகிற  சாபம் எனக்கு  உனக்கென்ன ஒரே தினத்தில் கடந்து போய்விட்டாய் எனக்கு  ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔

ஒரு கவிதையின் பிறப்பு!

Image
தொண்டை முட்ட உணர்வுகள் மேலிட  வார்த்தைகளற்ற  சூழ்நிலைகளில்  ஒரு இதயம் கசியும் பாடலோ இயற்கை உந்துதலோ  தேவைப்படுகிறது ..  நீயோ  நின் குரலோ கேட்கையில்  கஷ்டமின்றி  நிகழ்ந்துவிடுகிறது  ஒரு கவிதையின் பிறப்பு!

ஏனடா இத்தனை அவசரம்!

Image
இன்று  குளிர்சூடி உதித்த சூரியனும் மழைதாங்கி வீசுகின்ற காற்றும் என்றும் போலன்றி இதயம் கணக்கச் செய்கின்றன நேற்றுவரை  நீயிருந்தாய்  பால்யத்தின் நீட்சியாய் - நீண்ட  பயணத்தின் சாட்சியாய்  இன்று இல்லை  போய் விட்டாய்  காலனழைக்க  காததூரம்  காலத்தின் வீழ்ச்சியாய்! திரும்பி  வரவே முடியாத,   சந்திக்கவே முடியாத  சாவின் தூரம்…  உனக்கு மட்டும்  முன்னதாகவே  நீ நிகழ்த்திக் கொண்ட   முற்றுப்பயணம்! நினைவுகள் அழுத்த புலம்பித் திரிகிறோம் உன் உற்றமும் நட்புச் சுற்றமும் அழுகை குரலோடு அழுத்தும் கேள்விகளோடு அவள்களும் அவன்களும்  அவர்களும்  நெஞ்சம் விம்மி  நேசம் பொருட்டு  கண்ணில் கோர்க்கிறார் கண்ணீர் துளிகள் சில துளிகள் வெளிப்படையாகவும் சில இரகசியமாகவும் உதிர்ந்து  இதயங்கள் உடைபடும் ஓசைகள் கேட்கின்றன எல்லாமும்  என் இதயத்திற்கருகில்   இடைவிடாது கேட்பதுதான்  துயரம் எவ்வளவுதான்  தாங்கும்  இந்த ஒருசோடிக் காதுகளும்  ஒற்றை நெஞ்சமும்! ஏனையோரை  இரவில், இருளில்  அ...

நண்பன் சங்கருக்கு அஞ்சலி..

Image
சரியாக நினைவிலில்லை. சராசரியாக 1993 வாக்கில் இருக்கும்.  திருநெல்வேலி, சுத்தமல்லி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (மந்தை ஸ்கூல்) ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நியாபகம்.  சரஸ்வதி டீச்சர் வகுப்பு ஆசிரியர். எல்லா நிலை மாணவர்களும் பெரிதாக எந்த வித  பேதமுமின்றி பயின்ற காலம் அது. அப்பொழுதெல்லாம் விவேகானந்த கேந்திரம் நடத்தும் போட்டிகள் அரசுப் பள்ளிகள் அளவில் பிரபலம். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி , இன்னும் சில போட்டிகள் என வருடா வருடம் நடக்கும். பள்ளியிலிருந்து சில சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். நானும் சென்றிருக்கிறேன். நான் சிறந்த மாணவரா??!! அப்படித்தான் நினைக்கிறேன்… ஆனால் பரிசெல்லாம் நமக்கு ரெம்பத் தூரம். போவது வருவதோடு சரி. ஒரு புளி சாதம் கட்டிக்கொண்டு ஜாலியாக போய் வருவதோடு சரி.  தூரமாக சங்கர் அறிமுகமானது அங்கிருந்துதான். எல்லா வருடங்களிலும், நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிற ஒரு பிரைட் ஸ்டுடென்ட் . ஆளும் பிரைட் , அறிவும் பிரைட்.  அவனது ஆளுமை (personality ) பற்றியும் சொல்ல வேண்டும். மொத்தப் பள்ளி...