துளிகள்
மனம் திறக்க
ஆயத்தமாகிறாய்
என்றுதான் எடுத்துக்கொள்கிறேன்
***
***
என்னில் எஞ்சியிருக்கும்
ஒரே மனிதம்
உன் காதல் தான்!
***
***
அவள் வருகையில்
நீ போய்விடுவதாய்
சொல்கிறாய்
நீ வந்ததே
அவள் வந்தபின் தானே!!
***
***
மானுட உச்சம் நீ!
மிச்சம் நான்!
***
***
ஐன்ஸ்டீனுக்கும்
அவளுக்கும் பிறந்த அழகி நீ
அறிவன் நான்!
***
***
அடிவயிற்றில் தகிக்கும்
அரக்கப் பசி
எனது காதல்
நீ உணவு!!
***
***
இருதயம் நொறுங்க
ஒரு இறுக்க கூடல்
முடிவில்
முடியுரசும் ஒரு
முன்னந்தலை முத்தம்!
முக்தியளி எனக்கு!
***
பெய்யும் துளிகளில்
நீ தான் தெரிகிறாய்
பார்வைக் கோளாறில்லை
பருவக் கோளாறுமில்லை
பாவைக் கோளாறு!!
***
கவிதைகள் குவித்து
***
கவிதைகள் குவித்து
உன் காதல் மனது
திறப்பதுதான்
இனிமேல்
எந்தன்
எல்லாகாலத் திட்டமும்...!!
***
***
கண்களில்
காதலிசை இருத்தி
நெஞ்சினில்
நின் நினைவோடு மயங்குதல்
மட்டுமே
என் மனதுக்கு வாழ்தல்
மற்றதெல்லாம்
மட உடலுக்கு மட்டுமே!!
***
விதைக்கும் போதெல்லாம்
மிதிக்கிறாய்
ஆழமாய் விதைகிறேன்!!!
***
***
திறக்காத மனது
மூடாத
கல்லறைக்கு சமம்...
***
***
காலை உணவுக்கு
கொஞ்சம் கண்கள்
மதியத்துக்கு
மடிப்புள்ள உதடுகள்
இரவுக்கு மட்டும்
எல்லாம்
இருந்தும் பட்டினி நான்
இன்னும் பசிக்கிறது எனக்கு!!!
***
***
எளிதில் திறக்காதே
இறுக்கிய மனதை
காதல் வந்தாலும்
கவிதையும் முக்கியமெனக்கு!!
***
***
எனக்கு
உன் காதல்
கிடைக்காவிடினும்
பரவாயில்லை
உனக்கு
என் போல்
காதலன் கிடைக்கப்போவதில்லை
என்ற அங்கீகாரம்
கிடைத்தபின்பு!!
***
நீ இதயத்தை
எப்படி வேண்டுமானாலும்
மறைக்கலாம்
காதல் கொட்டுகின்ற
கண்களை
என்ன செய்வாய்!!
***
***
இறைவனை வேண்டி
எல்லோரும் ஒரு நாள்
விரதமிருக்கலாம்
நான் உன்னை வேண்டி
ஒரு ஆயுள் முழுக்க
இருக்கிறேனே!!!
***
***
காய்ந்த ரொட்டி
கடுத்த தேநீர்
காதெல்லாம் காதல்
மனதில் நீ
இன்னும் குளிக்காத
எனக்கு
இன்று விடுமுறையாம்!!!
***
***
நான் பெருங்கவிஞனோ!
நீ பிறக்காதிருப்பின்??
***
***
பரிணாமத்தில்
நிமிர்ந்த மனிதக் குரங்குகள்
என்போன்ற ஏனையோர்
உன்போல் ஒருத்திகள்
உலகில் இல்லாதுபோயிருப்பின்!!
***
***
நின் நினைவற்ற
மணித்துளி உறக்கம்
சாக்காடு
விழித்தால்தான் பிறப்பு!!
***
***
சதைதாண்டிய மனம்
சதையாலான மனங்களுக்கு
சட்டென - ஏன்
சாகும்வரைகூட
புரியாது போதல்
சாபம்!!!
***
அன்பின் மொழி புரிய
அறிவைக் கிளருபவள் நீ!
அமைதியாய் இருப்பன் நான்!!
***
காதல் புரிய
காதல் புரிய
கற்றல் அவசியமில்லை
புரிந்தவர்க்கு
புரிதலே அவசியமில்லை.
***
வாழ்தலுக்குதான்
வரைமுறை
அதுவும் மனிதரூடே!!!
***
***
என்
அடிப்படைத் தேவைகள்
மொத்தம் ஆறு
உணவு
உடை
உறைவிடம்
எனக்கான நீ!
உனக்கான நீ!
நமக்கான நீ!
***
சர்வதிகாரம் ரசிப்பவன் நான்
காதலில் நீ
என்னிடத்தில் மட்டும்
செய்வதாய் இருப்பின்!!
***
***
என் காதலை
சட்டைசெய்யாது
நீ இறப்பின்
உன் ஆத்மாவின் நிறம்
கருப்பாகாக் கூடும்
***
தியான ஒளி நீ
தியான ஒளி நீ
தினம்
தேடியலைபவன் நான்!!
***
உள்ளே ஒளிரும்
உனக்கான காதலில்
எனக்கான சக்தி
சேகரிப்பவன் நான்!
***
நீ
அமர்ந்து நகர்ந்த
இடத்தில்
அகல் விளக்கை
ஏற்றுகிறேன்
குலதெய்வம் தோன்றலாமிங்கு
கோடி ஆண்டுகளுக்குப் பிறகாவது!!
***
***
இயற்பியல்
வேதியியல்
கணிதவியல்
எல்லோருக்கும்
புரிவதில்லை
புடித்ததுவுமில்லை
அதற்காக
அதெல்லாம்
இல்லாமலா
போய்விட்டது
இயங்காமலா
போய்விடாது
பதில் போதும்
என நினைக்கிறேன்!
***
எடிசனுக்கு தெரியவில்லை
எலிப்பொந்தில்
பூனையும் போகலாமென்று
நீ எம்மாத்திரம்!!
***
சிறுவயதில்
சிறுவயதில்
மிதிவண்டி பழக
முனைந்த முனைப்போடுதான்
உன்னையும் காதலிக்கிறேன்
எனக்கு இப்போது
எல்லா வண்டியும் அத்துப்படி
***
***
அன்றொரு
அவளால் தொடங்கிய
இவ்வாழ்வு
இன்றொரு
இவளில்
முடிவதுதான்
நான் விரும்பும்
வாழ்தல் சூத்திரம்.
***
தெளிந்த மன நிலையில்
கண் எறிகிறாய் நீ
கலங்கித் தெளிந்து
களங்குகிறேன் நான்!!
***
நான் பேசினால்தானே
இந்தக் கவிதையெல்லாம்
வாயை மூடிக்கொள்கிறேன்
என்கிறாய்
கண்களையும் சேர்த்து
என்கிறேன் நான்!
***
எனக்கு திருமணம்
நிச்சயிக்க போகிறார்கள்
என்கிறாய்
உனக்கில்லை
உன் உடலுக்கென்கிறேன் நான்!
***
உனக்கான
என் கவிதைகள்
அர்த்தமற்றவை என்கிறாய்
ஆண்டாள் பாசுரத்தையும்
அன்று எல்லோரும்
இப்படித்தான் சொல்லியிருப்பார்கள்!
***
இருளில்
ஒளிரும் நினைவு
நின் கனவு
ஒளியில்
தொலையும் கனவு
நின் நினைவு!!!
***
ஆதாமுக்கு
ஆப்பிள்
எனக்கு
உன் கன்னம்!
***
இனிப்பை தேடி
எப்படியாவது வரும்
எறும்பு மாதிரிதான்
உன்னைத்
தேடி வரும் நானும்
அனிச்சை செயல்!
***
நான் என்ன
பெரிய பேரழகியா
பொய் சொல்கிறேன்
என்கிறாய்
தாஜ்மஹாலுக்கு
எப்படித் தெரியும்
தனது பேரழகு?!!
***
உன் தலையுதிரும்
மயிர்க்கற்றைகள்
சேகரித்து வைக்கிறேன்
என்கிறேன்
"கிறுக்கா உனக்கு"
இது நீ
மயிலுக்கு
மயிலிறகு
மதிப்பற்றதுதான்
மனிதனுக்கு!!!
***
உனக்கு வேற வேலையே
இல்லையா
என்கிற உன்னிடத்தில்
என் இதய பலகையை
எடுத்து வந்து
காண்பிக்கிறேன்
அது இவ்வாறு உள்ளது
"நின் முழு நேரக் காதலன்"
***
வெளியே தழுவும்
குளிரும் நீ!!
உள்ளே தகிக்கும்
கனலும் நீ!!
***
நீ புடவையணிந்து
நட
நிர்வாணமாகட்டும்
நகரம்!
***
உன் காதுமடல்
உரசுகிறது
காற்று
கடுப்பாகிப் போகிறேன்
நான்!!
***
காலையில் எழுந்ததும்
கோபுர தரிசனம்
கோடி புண்ணியமென்கிறாய்
கண்விரித்து
செய்கிறேனே
இரவிலும் கூட என்கிறேன்!
***
வாசித்தவுடன்
வரிகள் மாறும்
உலகின்
ஓரே இரட்டை வரிப்புத்தகம்
உன் உதடுகள்!!
***
மேற்ப்படிப்புக்கு
என்ன ஆராய்ச்சி
செய்ய திட்டமென்கிறாய்
உன் வெட்கம்
ஆராயப் போகிறேன்
என்கிறேன்
உடனேயல்ல
என்பதற்குள்
உதிர்க்கிறாய்
நெளியும் வெட்கம் ஒன்றை!!
***
நானும் நீயும்
கூடினால் என்ன பிறக்கும்
என்கிறாய்
இரண்டு பெருங்கவிதைகள்
கூடினால்
ஒரு குட்டிக்
குறுங்கவிதையாவது
பிறக்குமென்கிறேன் நான்!!
***
மற்றவர்கள் சிரித்தால்
சிரிப்பு
நீ சிரித்தால்
மட்டும்
சிரிப் பூ!
***
அவித்து
குவித்து
அடுக்கப்பட்ட
அப்பம்
உன் கன்னம்
அலைகின்ற பூனை
என் எண்ணம்!
****
நீதான்
அடுத்த "அம்மா"வெனில்
அடிபணியும்
மு.க நான்!!
***
உன்னை
நாயென்பவரிடம்
உரக்கச் சொல்
நாய்
நல்ல மிருகம்!
***
வியர்வை
துளியில் தனிவது
விரக தாகம்!!
***
காற்று உள்ளிழுத்து
வாழ்ந்தது போய்
காதல்
உள்ளிழுக்க
வாழ்வது
வாலிபம்!
***
கொதிக்கின்ற
குமிழ் குழம்பு நீ
துடிக்கின்ற
நுனி நாக்கு நான்!!!
***
நீ சாதாரண பெண் தான்
நீ சொல்லுவதுபோல்
நீ அசாதாரண காதலியுந்தான்
நான் சொல்வதுபோல்
***
கடவுளுக்கு
படைத்து விட்டு
கடைசியில் உண்ணும்
படையல் போலதான்
உன் பார்வைக்கு
படைத்து விட்டு
பதிவேற்றும்
எனது கவிதைகளும்!
***
மூடிக் கிடக்கும்
புத்தகம் நீ
முயற்சித்துத் திறக்கும்
விரல்கள் நான்!!
***
சுண்டக்காய்ச்சி
சூடமர
பரணில்
பாதுகாத்து
வைத்திருக்கும்
பசும்பால் நீ!
எட்டியிழுத்துக்
குடித்துவிடவோ
கொட்டிவிடவோ
இங்கும் அங்கும்
இரவில் ஒளிரும்
பூனை நான்!!
***
இரவு நீளட்டும்
கனவோடு நீயுந்தான்!!
***
இருளில் ஒளிரும்
இரு ரேடியப் பண்கள்
நின் கண்கள்! .
***
நின் கருப்பு வெள்ளை
புகைப்படத்தில்
கலராய்த் தெரியுது
எனக்கு மட்டும்
காதல்!!
***
ஒரு வெறித்தனமான
***
தெளிந்த மன நிலையில்
கண் எறிகிறாய் நீ
கலங்கித் தெளிந்து
களங்குகிறேன் நான்!!
***
நான் பேசினால்தானே
இந்தக் கவிதையெல்லாம்
வாயை மூடிக்கொள்கிறேன்
என்கிறாய்
கண்களையும் சேர்த்து
என்கிறேன் நான்!
***
எனக்கு திருமணம்
நிச்சயிக்க போகிறார்கள்
என்கிறாய்
உனக்கில்லை
உன் உடலுக்கென்கிறேன் நான்!
***
உனக்கான
என் கவிதைகள்
அர்த்தமற்றவை என்கிறாய்
ஆண்டாள் பாசுரத்தையும்
அன்று எல்லோரும்
இப்படித்தான் சொல்லியிருப்பார்கள்!
***
இருளில்
ஒளிரும் நினைவு
நின் கனவு
ஒளியில்
தொலையும் கனவு
நின் நினைவு!!!
***
ஆதாமுக்கு
ஆப்பிள்
எனக்கு
உன் கன்னம்!
***
இனிப்பை தேடி
எப்படியாவது வரும்
எறும்பு மாதிரிதான்
உன்னைத்
தேடி வரும் நானும்
அனிச்சை செயல்!
***
நான் என்ன
பெரிய பேரழகியா
பொய் சொல்கிறேன்
என்கிறாய்
தாஜ்மஹாலுக்கு
எப்படித் தெரியும்
தனது பேரழகு?!!
***
உன் தலையுதிரும்
மயிர்க்கற்றைகள்
சேகரித்து வைக்கிறேன்
என்கிறேன்
"கிறுக்கா உனக்கு"
இது நீ
மயிலுக்கு
மயிலிறகு
மதிப்பற்றதுதான்
மனிதனுக்கு!!!
***
உனக்கு வேற வேலையே
இல்லையா
என்கிற உன்னிடத்தில்
என் இதய பலகையை
எடுத்து வந்து
காண்பிக்கிறேன்
அது இவ்வாறு உள்ளது
"நின் முழு நேரக் காதலன்"
***
வெளியே தழுவும்
குளிரும் நீ!!
உள்ளே தகிக்கும்
கனலும் நீ!!
***
நீ புடவையணிந்து
நட
நிர்வாணமாகட்டும்
நகரம்!
***
உன் காதுமடல்
உரசுகிறது
காற்று
கடுப்பாகிப் போகிறேன்
நான்!!
***
காலையில் எழுந்ததும்
கோபுர தரிசனம்
கோடி புண்ணியமென்கிறாய்
கண்விரித்து
செய்கிறேனே
இரவிலும் கூட என்கிறேன்!
***
வாசித்தவுடன்
வரிகள் மாறும்
உலகின்
ஓரே இரட்டை வரிப்புத்தகம்
உன் உதடுகள்!!
***
மேற்ப்படிப்புக்கு
என்ன ஆராய்ச்சி
செய்ய திட்டமென்கிறாய்
உன் வெட்கம்
ஆராயப் போகிறேன்
என்கிறேன்
உடனேயல்ல
என்பதற்குள்
உதிர்க்கிறாய்
நெளியும் வெட்கம் ஒன்றை!!
***
நானும் நீயும்
கூடினால் என்ன பிறக்கும்
என்கிறாய்
இரண்டு பெருங்கவிதைகள்
கூடினால்
ஒரு குட்டிக்
குறுங்கவிதையாவது
பிறக்குமென்கிறேன் நான்!!
***
மற்றவர்கள் சிரித்தால்
சிரிப்பு
நீ சிரித்தால்
மட்டும்
சிரிப் பூ!
***
அவித்து
குவித்து
அடுக்கப்பட்ட
அப்பம்
உன் கன்னம்
அலைகின்ற பூனை
என் எண்ணம்!
****
நீதான்
அடுத்த "அம்மா"வெனில்
அடிபணியும்
மு.க நான்!!
***
உன்னை
நாயென்பவரிடம்
உரக்கச் சொல்
நாய்
நல்ல மிருகம்!
***
வியர்வை
துளியில் தனிவது
விரக தாகம்!!
***
காற்று உள்ளிழுத்து
வாழ்ந்தது போய்
காதல்
உள்ளிழுக்க
வாழ்வது
வாலிபம்!
***
கொதிக்கின்ற
குமிழ் குழம்பு நீ
துடிக்கின்ற
நுனி நாக்கு நான்!!!
***
நீ சாதாரண பெண் தான்
நீ சொல்லுவதுபோல்
நீ அசாதாரண காதலியுந்தான்
நான் சொல்வதுபோல்
***
கடவுளுக்கு
படைத்து விட்டு
கடைசியில் உண்ணும்
படையல் போலதான்
உன் பார்வைக்கு
படைத்து விட்டு
பதிவேற்றும்
எனது கவிதைகளும்!
***
மூடிக் கிடக்கும்
புத்தகம் நீ
முயற்சித்துத் திறக்கும்
விரல்கள் நான்!!
***
சுண்டக்காய்ச்சி
சூடமர
பரணில்
பாதுகாத்து
வைத்திருக்கும்
பசும்பால் நீ!
எட்டியிழுத்துக்
குடித்துவிடவோ
கொட்டிவிடவோ
இங்கும் அங்கும்
இரவில் ஒளிரும்
பூனை நான்!!
***
இரவு நீளட்டும்
கனவோடு நீயுந்தான்!!
***
இருளில் ஒளிரும்
இரு ரேடியப் பண்கள்
நின் கண்கள்! .
***
நின் கருப்பு வெள்ளை
புகைப்படத்தில்
கலராய்த் தெரியுது
எனக்கு மட்டும்
காதல்!!
***
ஒரு வெறித்தனமான
பாடலைக் கேட்கும்போது
உன் நினைவு
வருவது
எதை உணர்த்தவோ?!
***
உச்ச தருணங்களில்
நீ உச்சரிக்கும்
முருகா
கடவுள் அழைப்பா?
காதல் அழைப்பா?!
***
நீ
இரவில்
ஒளிர்கையில்
அணைப்பவன்
எப்படி இறைவன்?
இரையவன்!!
***
காய் முற்றிக்
கனிவது போல்
காதல் முற்றக்
கனிவது
காமம்!
***
நான்
பகலில் தொலைக்கும்
என்னை
இரவில்
தருகிறாய்
நீ
தேடிப் பிடித்து!!
***
உன் நினைவு
வருவது
எதை உணர்த்தவோ?!
***
உச்ச தருணங்களில்
நீ உச்சரிக்கும்
முருகா
கடவுள் அழைப்பா?
காதல் அழைப்பா?!
***
நீ
இரவில்
ஒளிர்கையில்
அணைப்பவன்
எப்படி இறைவன்?
இரையவன்!!
***
காய் முற்றிக்
கனிவது போல்
காதல் முற்றக்
கனிவது
காமம்!
***
நான்
பகலில் தொலைக்கும்
என்னை
இரவில்
தருகிறாய்
நீ
தேடிப் பிடித்து!!
***
Comments
Post a Comment