நேற்றெடுத்த புகைப்படம்



நேற்றெடுத்த புகைப்படம்
என்றொன்றை அனுப்பினாள்

விழிகள் வலிக்க
வியந்து பார்த்து
அத்தனை அழகென்றேன்

அப்படியா என்றாள்

ஆமாம்
மீண்டும் தனியனாகி
உன்னைப் பின்தொடர
யோசிக்கவைக்கும்
அழகென்றேன்

ஒரு பெரிய வணக்கம்
வைத்து விடைபெற்றாள்!!! 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔