தோசை




அதீத ருசிக்காக
அந்த குறிப்பிட்ட மாவினை
வாங்கி வந்தாயிற்று

அனல் பறக்கும்
அண்மைக் கல்லில்
ஆவிபறக்க வார்த்து
எண்ணெய் விட்டு, நெய் விட்டு
எடுத்தாயிற்று

சன்னமாய் இடித்த பொடியும்
அரைத்த துவையலும்
சேர்த்து குழப்பி
சேர் வாய் சேர்க்கையில்

மூளை சொன்னது
முட்டாளே
நான் கேட்டது
அம்மா வார்த்த தோசை.!!

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔