Posts

Showing posts from 2024

August 2024

உன் சுவாசக் காற்றையும்  என் சுவாசக் காற்றையும்  தாங்கிச் திரிய போகிறது  இந்நகரம் இன்னும் சில தினங்களில் நிதானமாக இருக்க என் இதயத்தைக் கேட்டுக் கொள்கிறன் உன் பேரன்பை பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் உற்சாகத்தில்  பித்து பிடிக்கும் மனமும்  வாய்க்கப்போகிறது உன்னுடைய  எல்லா நேரமும்  எனக்கு வேண்டும்  எனும் குழந்தை மனதும் எல்லாம் புரிந்த பக்குவ மனதும் சண்டையிடப்போகின்றன..  உலகின்  அதி வேகமான இரு வாரங்களில் என் இதயம் செயலிழக்காது இருக்கட்டும். ************************************************************************ உன் வருகையை  எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொழியாத மேகத்தைக் கண்டேன் நேற்று காத்திருக்கும் வளை கடைகளையும் நீ அணிந்து தேர்ந்தெடுக்க சண்டையிட்டு காத்திருக்கும் துணியகங்களையும் நேற்று கண்டேன் நீ விமான நிலையம்  வந்தடைந்து திரும்பிச் செல்லும்வரை மகிழ்ந்து ஒளிரப்போகும் இந்நகரைக் காண அத்தனை ஆவலாயிருக்கிறது. ***************************************************************************** இலேசாக  தூறிக்கொண்டிருக்கிறது மழை நனைய அடம்...

வெயிலுக்கு எப்பொழுதும் உந்தன் நிறம்!

Image
  வழக்கத்திற்கும் மாறாக சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது வெயில்! தாய்க்கோழியின் கதகதப்பில் ஓடி ஒளிந்து கொள்ளுகிற சிறு குஞ்சுகளாய் குளிர் நிழல் தேடும்  நெஞ்சம் நமது! என்றோ தோல் கறுக்க  அலைந்துதிரிந்த  தினங்களும் வயற்காட்டு அறுவடையும்  அம்மாவின் மொட்டைமாடி வடகமும், நீர்மோரையும்  நியாபகத்திற்குக்  கொண்டு வருகிறது இவ்வெயில்! குயிலும், குருவியும் மயிலும்,  மரண வெயிலில் என் செய்யுமோ  என பதைபதைப்பையும்  நெஞ்சில் விதைக்கிறது  இச்சுடு வெயில்! இந்தச் சூடு சுடும் வெயிலை நான் ரசிக்க சுவாரஸ்யமான காரணம் ஒன்றுண்டு அது என்னவெனில்  வெயிலுக்கு எப்பொழுதும் உந்தன் நிறம் அது  அழகு மஞ்சள் நிறம்!

காத்துக்கொண்டேயிருப்பேன்!

Image
சற்றே பனிசூழ்ந்திருக்கும்  காலைப்பொழுதில்  கதிராக ஊடுருவும்  உனது நினைப்பில்  மகிழ்ந்திருக்கிறேன்! இப்பொழுதெல்லாம்  அடிக்கடி  கண்கள் பனிக்கின்றன  மனது இலகுவாக  இருக்கிறது  அன்பின் அதீதம்  என்னை புரட்டிப் போடுதலை  உணரமுடிகிறது  நேற்று  நீ உதிர்த்த  அந்த வரலாற்றுச் சொற்றொடரை  வரிகளாய்  வார்த்தைகளாய்  பிரித்து கோர்த்து  விளையாடும் குழந்தையாய்  மனதை மாற்றி விட்டிருக்கிறாய்! எனக்கே தெரியாத  என் ஆழ்மன உணர்வுகளை  வீணையின்  நரம்புகளாய்  மீட்டி இசையாக்குகிறாய்  எப்பொழுதும்! நீதான் வேண்டுமென  அடிக்கடி  அழுகின்ற  அடம் பிடிக்கிற - இந்த  ஆழ்மனக் குழந்தையை   உன்னிடம் சேர்ப்பிக்க  காலம்  கூடவே கூடாது போலும்! நீ  விரைவில்  வருவதாய்  சொல்லியிருக்கிறாய்  நாட்களை  எண்ணத் தொடங்கிவிட்டேன்! காலம்  இனி  மின்னல்வேகத்தில்  என் மனதோடு  இயைந்து ஓடும்! இதயம் படபடக்கத்  தொடங்கியிருக்கிறது  அதை ஆசுவாசப்பட...

எனது மோனலிசா!

Image
இந்த முகம் எனது கவிதைகளுக்கான  நதிமூலம் பரந்த  சிவந்த நெற்றி  நான் கண்களால்  கவிதை எழுதிப் பழக  ஏற்ற இடம்!   எனக்கான எல்லா உணர்வுகளின் மொத்த அகராதியும்  அந்தக் கண்கள்! இரு புருவங்கள் - என்  எல்லா பருவங்களின் தொகுப்பு! இரு கன்னங்களில்  எல்லா மொழிகளும் எல்லா வார்த்தைகளும்  எழிலாய் அடக்கம்! நாசி  கூர்ந்து நோக்கின் ஒருமுகப்படுத்தும்  காதல் தியானத்தின்  உச்சி! இதழ்கள்  என்னவென்று சொல்ல! இலக்கண குவியலென அச்சிறு நாடி! உனது இந்த முகம் என்னுள்  ஆழப்பதிந்து கைப்பிடித்து  என்னை கவிதை எழுதவைக்கும் எனது மோனலிசா! 

நீ இன்றும் என்னவளன்றோ!

Image
சற்றே பிந்திய  தூரதிருஷ்டசாலி நான்!   ஆழ்மனக்  கேவலை  உணர மறந்த அறிவிலி நான்!  கண்கள் பேசும்  கவிதையை  வாசிக்க மறந்த  குருடன் நான்!  ஆத்மாக்களின்  அன்பின் மொழியை  கேட்க மறந்த  செவிடன் நான்! கைவந்த நிலவை  தவறவிட்டு விட்டு  தினம் வானம் பார்த்து  வருத்தத்தில்  கவிதை எழுதும்  கவிஞன் நான்!  நீ முதன் முதலாய்  வந்து போகையில்   ஆற்றல் இழந்த  இதயத்தின் வலியை  அன்றே உணர்ந்திருப்பின்  நீ இன்றும் என்னவளன்றோ!

நீ வாழிய..

Image
இப்போதெல்லாம்  வார்த்தைகளுக்கு  வரிகளுக்கு  பஞ்சமாயிருக்கிறது..  கடவுளின் நாட்டில் கட்டிலில் அமர்ந்தவாறே விரிந்து கிடக்கும்  இந்நகரத்தை நோக்கிக் கொண்டிருக்கிறேன்  வெகு நேரமாக என் எல்லா  மன உணர்வுகளையும் பேச்சிலோ எழுத்திலோ  அடக்கி விட முடிவதில்லை நிரம்பித் தழும்பும் நீர்தான் நீ காண்பது நீ கேட்பது நீ வாசிப்பது முற்றுமல்ல கழிந்த இரவிலும் கனவில் நீ வந்தாய் நனவில் நிகழா நல்லதனைத்தையும் நிகழ்த்திப் போகிறாய் தினமும் நான் நானா இல்லை நீயா என சந்தேகிக்கும் அளவிற்க்கு  உனைத் தாங்கிக் திரிகிறேன் வாழ்வு  உனக்காக உன்னால் மலர்ந்திருக்கிறது மகிழ்ந்திருக்கிறது அகமும்  புறமும்  என்னுள் விருட்சமாயிருக்கும்  நீ வாழிய..

Your Kid!

Image
There is a kid inside here Who is very cute Who is so lovely  Who is charming As like you. The kid is yours Who born to you  Came to this world alive because of you  He who knows nothing except  You and  your Love! For him  You are the world You are the destiny You are the purpose you are his everything! All your expressions All your emotions Love, hope, sadness, and happiness  multiplied multifold inside his small heart It's beating with your name..all the time Remember! Already he has a feeling that  He didn't get the opportunity  To be with you To study with you To work with you He is so unfortunate he feels often He has never been in your proximity much He has never been with you alone for a moment He has never been blessed enough to have your touch and smell He is not enough lucky as he often feels The kid ( inside me ) was found by you  He got nurtured and grown by you He realized love from you  You are his mother You are his ...

வினோதங்களின் வினோதம் நீயெனக்கு!

Image
வினோதங்களின் வினோதம் நீயெனக்கு! நீ உனதன்பை  உரைக்கும் தருணத்தில் உன் மடியில் பெருமகிழ்வில்  உயிர் விடுதல்  பெறுதற்கரிய பெருவரமென்று   எண்ணுவதுண்டு.  யாருமற்றதாயிருக்கும் இரயிலில் மயக்கும்  அவ்விரு கன்னங்களையும்  கதைகள் பேசும்  ஆச்சர்ய விழிகளையும்  பருகிக்கொண்டே பயணிக்கும் கனவு எனக்குண்டு.  சாலையில் அழகிய மாலையில் என் பின்னமர்ந்து நீயோ உன் பின்னமர்ந்து நானோ மயங்கிப் பயணிக்கும் நாள்களை நனவாக்கும்  பிரக்கை எனக்குண்டு உனது  நீண்ட கால் விரல்களைப் பற்றிக் கொண்டு கை விரல்களையும்  பிணைத்துக் கொண்டு அந்த ஒளிரும்  கண்களை நோக்கியவாறே மனனமாய்  கவிதை படிக்கும் ஆழ் விருப்பமுண்டு நான் நம்பாக் கடவுளர்களை உன் மகிழ்விக்காய் வேண்டிக்கொண்ட வரலாற்று மாயங்கள்  நிகழ்த்துமுன்னை உச்சிமுகற  நான் செய்யும் தவங்கள் நிறையவுண்டு..  உனதடிவயிற்றின் குளிர்ச்சியில் அங்கங்கள்  கொஞ்சங்கொஞ்சமாய் வளர உன் வழி பிரசவித்து மார்ப்புப் பாலுண்டு உன் மகவாய் மடியில் தவழும் போராசை  எல்லாப் பிறவியிலும் எனக்குண்டு..  "டேய்" என்றும் "...

My guardian angel

Image
I am thinking again and again Going back and forth on  my thoughts My days My memories How did you come in?  How did you connect deeply?  How did you enter into my personal proximity?  How did I start loving you?  When do I start missing you?  Who you are to me?  Where you were?  Endless question.. No answers.. But I am happy now Feel complete  More productive  More satisfied Love everyone  Able to sense the beauty around me Enjoy living..  You made it possible..  The moment you said you love me My nightmares become dreams My bitterness becomes sweet  My dark becomes light My sadness replaced with happiness Miracles started happening  Stars started falling for me You litted the light on the dying life You are magic happened in my life  You are the synonym of my love You are the eternity I choose upon now You are undoubtedly my angel My guardian angel!

முத்தம் ( மீள் )

Image
மகளின் முத்தம்:-       கன்னத்தோடு கன்னம் ஒட்டி அவள் இமைகளுக்கிடையில் பார்வைதனைச் செலுத்தி அவள் விழி வழி இவ்வுலகம் காண விழைகையில் என் கன்னத்தில் பதிகிறது ஒரு ஈர முத்தம். முத்தம் என்பது என்ன?. ஏன் ஒரு குழந்தை முத்தமிடுகிறது? முத்தத்திற்க்கு முன் பின் நடக்கும் உடற்செயலியல் என்ன? ஏன் முத்தங்கள் பொதுவாக கன்னங்களிலும், உதட்டிலும், புறங்கையிலும், நெற்றியிலும் மட்டும் அதிகமாக இடப்படுகிறது?. குழந்தையின், காதலியின், நட்பின்,பெற்றவர்களின் முத்தங்கள் ஏன் வெவ்வேறு உணர்வுகளை உணரச்செய்கிறது என்ற எண்ணற்ற சிந்தைனைகளை மனம் கடக்கையில் இன்னொரு முத்தம் கிடைக்கிறது எனக்கு. என் மகளின் முத்தம் கிடைத்த  மறுநொடி நான் மரித்துப் போனால் சொர்க்கம் கிடைப்பதாக நான் கனவுகள் கூட காண்பதுண்டு.குழந்தைகளுக்கு முத்தம் பற்றிய அறிவென்பது முத்தம் மூலமாக குழந்தைக்கு கடின உணவுகளை தாயானவள் மென்று ஊட்டிய பழக்கம் (Kiss Feeding) மூலமாக பதிவான பழக்கமென அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் தாய்தான் முத்தத்தின் ஆதாரம்.என் மகளில் முத்தங்களில் மனைவியும் ஒளிந்திருக்கிறாளோ?. பைபிளின் பழைய அதிகாரத்தில் முத்தங்களைப் பற்றி...

எல்லாவற்றுக்கும் நீதான்!

Image
இரண்டொரு நாட்களாக  கதைக்க நேரமின்றி  சொற்களின் கனத்தை சுமந்துகொண்டே அழைகிறேன் பல தினங்களாக பகிர்ந்த கவிதைகளை நீ இன்னும் படிக்கவுமில்லை பார்க்கவுமில்லை அம்மா வந்து போனது அலுவலக அங்கலாய்ப்புகள் பத்திரிக்கைகளில் படித்தது படம் இரண்டு பார்த்தது அக்கம்பக்க நிகழ்வுகள்  அந்தரங்க புலம்பல்கள் என நிகழ்வுகள்  நிரம்பி முட்டுகையில்  நேரமின்றி இருக்கிறாய் சிந்தை வெடிப்பதற்குள் சீக்கிரம் செவிமடு ஏனெனில் என் எல்லாவற்றுக்கும் காதுகளை காதலோடு  கொடுப்பவள் நீதான். 

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔

Image
வார இறுதி நாட்களில்  உன் நினைவைத் தாங்கி  சில மணிநேரம்  தனித்திருக்கிறேன் இதர நாட்களில்  சில நிமிடங்கள் பெருகும் கண்ணீரை  கனக்கும் இதயத்தை  என்ன சொல்லி  தேற்றுவதெனத்  தெரியவில்லை இதயத்திற்கு  இத்தனையருகில் - ஒரு இழப்பை  துயரத்தினை வலியை  நான் சந்தித்ததேயில்லை நிறைய நல் நினைவுகளை  தந்த நீ இதையும் தந்து  போயிருக்கிறாய் உனது அருகாமை இதயத்தினை இலேசாக்கும் எப்போதும் முதன் முறை உனது இல்லாமை கணமாக்கியிருக்கிறது ஒளிரும்  உனது கண்களை  நெருப்புக்கு  தின்னக் கொடுத்துவிட்டு  இருளில்  அலைகிற, அழுகிற  சாபம் எனக்கு  உனக்கென்ன ஒரே தினத்தில் கடந்து போய்விட்டாய் எனக்கு  ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔

ஒரு கவிதையின் பிறப்பு!

Image
தொண்டை முட்ட உணர்வுகள் மேலிட  வார்த்தைகளற்ற  சூழ்நிலைகளில்  ஒரு இதயம் கசியும் பாடலோ இயற்கை உந்துதலோ  தேவைப்படுகிறது ..  நீயோ  நின் குரலோ கேட்கையில்  கஷ்டமின்றி  நிகழ்ந்துவிடுகிறது  ஒரு கவிதையின் பிறப்பு!

ஏனடா இத்தனை அவசரம்!

Image
இன்று  குளிர்சூடி உதித்த சூரியனும் மழைதாங்கி வீசுகின்ற காற்றும் என்றும் போலன்றி இதயம் கணக்கச் செய்கின்றன நேற்றுவரை  நீயிருந்தாய்  பால்யத்தின் நீட்சியாய் - நீண்ட  பயணத்தின் சாட்சியாய்  இன்று இல்லை  போய் விட்டாய்  காலனழைக்க  காததூரம்  காலத்தின் வீழ்ச்சியாய்! திரும்பி  வரவே முடியாத,   சந்திக்கவே முடியாத  சாவின் தூரம்…  உனக்கு மட்டும்  முன்னதாகவே  நீ நிகழ்த்திக் கொண்ட   முற்றுப்பயணம்! நினைவுகள் அழுத்த புலம்பித் திரிகிறோம் உன் உற்றமும் நட்புச் சுற்றமும் அழுகை குரலோடு அழுத்தும் கேள்விகளோடு அவள்களும் அவன்களும்  அவர்களும்  நெஞ்சம் விம்மி  நேசம் பொருட்டு  கண்ணில் கோர்க்கிறார் கண்ணீர் துளிகள் சில துளிகள் வெளிப்படையாகவும் சில இரகசியமாகவும் உதிர்ந்து  இதயங்கள் உடைபடும் ஓசைகள் கேட்கின்றன எல்லாமும்  என் இதயத்திற்கருகில்   இடைவிடாது கேட்பதுதான்  துயரம் எவ்வளவுதான்  தாங்கும்  இந்த ஒருசோடிக் காதுகளும்  ஒற்றை நெஞ்சமும்! ஏனையோரை  இரவில், இருளில்  அ...

நண்பன் சங்கருக்கு அஞ்சலி..

Image
சரியாக நினைவிலில்லை. சராசரியாக 1993 வாக்கில் இருக்கும்.  திருநெல்வேலி, சுத்தமல்லி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (மந்தை ஸ்கூல்) ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நியாபகம்.  சரஸ்வதி டீச்சர் வகுப்பு ஆசிரியர். எல்லா நிலை மாணவர்களும் பெரிதாக எந்த வித  பேதமுமின்றி பயின்ற காலம் அது. அப்பொழுதெல்லாம் விவேகானந்த கேந்திரம் நடத்தும் போட்டிகள் அரசுப் பள்ளிகள் அளவில் பிரபலம். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி , இன்னும் சில போட்டிகள் என வருடா வருடம் நடக்கும். பள்ளியிலிருந்து சில சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். நானும் சென்றிருக்கிறேன். நான் சிறந்த மாணவரா??!! அப்படித்தான் நினைக்கிறேன்… ஆனால் பரிசெல்லாம் நமக்கு ரெம்பத் தூரம். போவது வருவதோடு சரி. ஒரு புளி சாதம் கட்டிக்கொண்டு ஜாலியாக போய் வருவதோடு சரி.  தூரமாக சங்கர் அறிமுகமானது அங்கிருந்துதான். எல்லா வருடங்களிலும், நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிற ஒரு பிரைட் ஸ்டுடென்ட் . ஆளும் பிரைட் , அறிவும் பிரைட்.  அவனது ஆளுமை (personality ) பற்றியும் சொல்ல வேண்டும். மொத்தப் பள்ளி...