உனக்கு காதல் வராமைக்கு
ஓராயிரம் காரணம் சொன்னாய்.
எனக்கு காதல் வந்தமைக்கு
ஒரு காரணமாவது
உன்னிடத்தில் சொல்லிவிட முயலுகிற
என்னை பார்த்து சிரித்து விட்டு
காதல் சொன்னது..
நீ காதல் வந்தமைக்கு காரணம் தேடுவது..
கடவுள் வந்தமைக்கு காரணம் தேடுவது போல
முடிந்தால் கண்டுபிடி பார்க்கலாம் என்று...
Comments
Post a Comment