வேலையற்றவனின் காதல்

வேலையற்றவனின் காதல் :-


பொழுது புலர்ந்து
பல மணித்துளிகளுக்கு
பிறகுதான் 
கண் விழிக்கின்றேன் ..


படுக்கை பானம் அருந்தி
பல்விலக்குவதட்குள்
பாதி பகல்பொழுது
முடிந்து விடுகிறது...

காலை உணவா? இல்லை
நேரடி மதிய உணவா? - என
யோசித்து உண்டு, உறங்கி எழுகையில்
முக்கால் நாளும் முடிந்து விடுகிறது...

இடையில் சில
புத்தக புரட்டல்கள்,
அலைபேசி உரையாடல்கள் என
முடிகிறது மாலையும், கருக்கலும்..

தொலைக்காட்சி பார்த்தும்
உறவுகளோடு உரையாடியும்
இரவு உணவோடு முடிந்து
கழிகின்றன என் வேலையற்ற பொழுதுகள்..

நித்தம் நித்தம் நிகழ்கின்ற
இத்தகைய நிகழ்வுகளிலும்
ஒற்றை நிமிடம் கூட கழிந்ததில்லை
அருகிலில்லாத உன் நினைவுகளின்றி 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔