Posts

August 2024

உன் சுவாசக் காற்றையும்  என் சுவாசக் காற்றையும்  தாங்கிச் திரிய போகிறது  இந்நகரம் இன்னும் சில தினங்களில் நிதானமாக இருக்க என் இதயத்தைக் கேட்டுக் கொள்கிறன் உன் பேரன்பை பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் உற்சாகத்தில்  பித்து பிடிக்கும் மனமும்  வாய்க்கப்போகிறது உன்னுடைய  எல்லா நேரமும்  எனக்கு வேண்டும்  எனும் குழந்தை மனதும் எல்லாம் புரிந்த பக்குவ மனதும் சண்டையிடப்போகின்றன..  உலகின்  அதி வேகமான இரு வாரங்களில் என் இதயம் செயலிழக்காது இருக்கட்டும். ************************************************************************ உன் வருகையை  எதிர்பார்த்துக் காத்திருக்கும் பொழியாத மேகத்தைக் கண்டேன் நேற்று காத்திருக்கும் வளை கடைகளையும் நீ அணிந்து தேர்ந்தெடுக்க சண்டையிட்டு காத்திருக்கும் துணியகங்களையும் நேற்று கண்டேன் நீ விமான நிலையம்  வந்தடைந்து திரும்பிச் செல்லும்வரை மகிழ்ந்து ஒளிரப்போகும் இந்நகரைக் காண அத்தனை ஆவலாயிருக்கிறது. ***************************************************************************** இலேசாக  தூறிக்கொண்டிருக்கிறது மழை நனைய அடம்...

வெயிலுக்கு எப்பொழுதும் உந்தன் நிறம்!

Image
  வழக்கத்திற்கும் மாறாக சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது வெயில்! தாய்க்கோழியின் கதகதப்பில் ஓடி ஒளிந்து கொள்ளுகிற சிறு குஞ்சுகளாய் குளிர் நிழல் தேடும்  நெஞ்சம் நமது! என்றோ தோல் கறுக்க  அலைந்துதிரிந்த  தினங்களும் வயற்காட்டு அறுவடையும்  அம்மாவின் மொட்டைமாடி வடகமும், நீர்மோரையும்  நியாபகத்திற்குக்  கொண்டு வருகிறது இவ்வெயில்! குயிலும், குருவியும் மயிலும்,  மரண வெயிலில் என் செய்யுமோ  என பதைபதைப்பையும்  நெஞ்சில் விதைக்கிறது  இச்சுடு வெயில்! இந்தச் சூடு சுடும் வெயிலை நான் ரசிக்க சுவாரஸ்யமான காரணம் ஒன்றுண்டு அது என்னவெனில்  வெயிலுக்கு எப்பொழுதும் உந்தன் நிறம் அது  அழகு மஞ்சள் நிறம்!

காத்துக்கொண்டேயிருப்பேன்!

Image
சற்றே பனிசூழ்ந்திருக்கும்  காலைப்பொழுதில்  கதிராக ஊடுருவும்  உனது நினைப்பில்  மகிழ்ந்திருக்கிறேன்! இப்பொழுதெல்லாம்  அடிக்கடி  கண்கள் பனிக்கின்றன  மனது இலகுவாக  இருக்கிறது  அன்பின் அதீதம்  என்னை புரட்டிப் போடுதலை  உணரமுடிகிறது  நேற்று  நீ உதிர்த்த  அந்த வரலாற்றுச் சொற்றொடரை  வரிகளாய்  வார்த்தைகளாய்  பிரித்து கோர்த்து  விளையாடும் குழந்தையாய்  மனதை மாற்றி விட்டிருக்கிறாய்! எனக்கே தெரியாத  என் ஆழ்மன உணர்வுகளை  வீணையின்  நரம்புகளாய்  மீட்டி இசையாக்குகிறாய்  எப்பொழுதும்! நீதான் வேண்டுமென  அடிக்கடி  அழுகின்ற  அடம் பிடிக்கிற - இந்த  ஆழ்மனக் குழந்தையை   உன்னிடம் சேர்ப்பிக்க  காலம்  கூடவே கூடாது போலும்! நீ  விரைவில்  வருவதாய்  சொல்லியிருக்கிறாய்  நாட்களை  எண்ணத் தொடங்கிவிட்டேன்! காலம்  இனி  மின்னல்வேகத்தில்  என் மனதோடு  இயைந்து ஓடும்! இதயம் படபடக்கத்  தொடங்கியிருக்கிறது  அதை ஆசுவாசப்பட...

எனது மோனலிசா!

Image
இந்த முகம் எனது கவிதைகளுக்கான  நதிமூலம் பரந்த  சிவந்த நெற்றி  நான் கண்களால்  கவிதை எழுதிப் பழக  ஏற்ற இடம்!   எனக்கான எல்லா உணர்வுகளின் மொத்த அகராதியும்  அந்தக் கண்கள்! இரு புருவங்கள் - என்  எல்லா பருவங்களின் தொகுப்பு! இரு கன்னங்களில்  எல்லா மொழிகளும் எல்லா வார்த்தைகளும்  எழிலாய் அடக்கம்! நாசி  கூர்ந்து நோக்கின் ஒருமுகப்படுத்தும்  காதல் தியானத்தின்  உச்சி! இதழ்கள்  என்னவென்று சொல்ல! இலக்கண குவியலென அச்சிறு நாடி! உனது இந்த முகம் என்னுள்  ஆழப்பதிந்து கைப்பிடித்து  என்னை கவிதை எழுதவைக்கும் எனது மோனலிசா! 

நீ இன்றும் என்னவளன்றோ!

Image
சற்றே பிந்திய  தூரதிருஷ்டசாலி நான்!   ஆழ்மனக்  கேவலை  உணர மறந்த அறிவிலி நான்!  கண்கள் பேசும்  கவிதையை  வாசிக்க மறந்த  குருடன் நான்!  ஆத்மாக்களின்  அன்பின் மொழியை  கேட்க மறந்த  செவிடன் நான்! கைவந்த நிலவை  தவறவிட்டு விட்டு  தினம் வானம் பார்த்து  வருத்தத்தில்  கவிதை எழுதும்  கவிஞன் நான்!  நீ முதன் முதலாய்  வந்து போகையில்   ஆற்றல் இழந்த  இதயத்தின் வலியை  அன்றே உணர்ந்திருப்பின்  நீ இன்றும் என்னவளன்றோ!

நீ வாழிய..

Image
இப்போதெல்லாம்  வார்த்தைகளுக்கு  வரிகளுக்கு  பஞ்சமாயிருக்கிறது..  கடவுளின் நாட்டில் கட்டிலில் அமர்ந்தவாறே விரிந்து கிடக்கும்  இந்நகரத்தை நோக்கிக் கொண்டிருக்கிறேன்  வெகு நேரமாக என் எல்லா  மன உணர்வுகளையும் பேச்சிலோ எழுத்திலோ  அடக்கி விட முடிவதில்லை நிரம்பித் தழும்பும் நீர்தான் நீ காண்பது நீ கேட்பது நீ வாசிப்பது முற்றுமல்ல கழிந்த இரவிலும் கனவில் நீ வந்தாய் நனவில் நிகழா நல்லதனைத்தையும் நிகழ்த்திப் போகிறாய் தினமும் நான் நானா இல்லை நீயா என சந்தேகிக்கும் அளவிற்க்கு  உனைத் தாங்கிக் திரிகிறேன் வாழ்வு  உனக்காக உன்னால் மலர்ந்திருக்கிறது மகிழ்ந்திருக்கிறது அகமும்  புறமும்  என்னுள் விருட்சமாயிருக்கும்  நீ வாழிய..

Your Kid!

Image
There is a kid inside here Who is very cute Who is so lovely  Who is charming As like you. The kid is yours Who born to you  Came to this world alive because of you  He who knows nothing except  You and  your Love! For him  You are the world You are the destiny You are the purpose you are his everything! All your expressions All your emotions Love, hope, sadness, and happiness  multiplied multifold inside his small heart It's beating with your name..all the time Remember! Already he has a feeling that  He didn't get the opportunity  To be with you To study with you To work with you He is so unfortunate he feels often He has never been in your proximity much He has never been with you alone for a moment He has never been blessed enough to have your touch and smell He is not enough lucky as he often feels The kid ( inside me ) was found by you  He got nurtured and grown by you He realized love from you  You are his mother You are his ...

வினோதங்களின் வினோதம் நீயெனக்கு!

Image
வினோதங்களின் வினோதம் நீயெனக்கு! நீ உனதன்பை  உரைக்கும் தருணத்தில் உன் மடியில் பெருமகிழ்வில்  உயிர் விடுதல்  பெறுதற்கரிய பெருவரமென்று   எண்ணுவதுண்டு.  யாருமற்றதாயிருக்கும் இரயிலில் மயக்கும்  அவ்விரு கன்னங்களையும்  கதைகள் பேசும்  ஆச்சர்ய விழிகளையும்  பருகிக்கொண்டே பயணிக்கும் கனவு எனக்குண்டு.  சாலையில் அழகிய மாலையில் என் பின்னமர்ந்து நீயோ உன் பின்னமர்ந்து நானோ மயங்கிப் பயணிக்கும் நாள்களை நனவாக்கும்  பிரக்கை எனக்குண்டு உனது  நீண்ட கால் விரல்களைப் பற்றிக் கொண்டு கை விரல்களையும்  பிணைத்துக் கொண்டு அந்த ஒளிரும்  கண்களை நோக்கியவாறே மனனமாய்  கவிதை படிக்கும் ஆழ் விருப்பமுண்டு நான் நம்பாக் கடவுளர்களை உன் மகிழ்விக்காய் வேண்டிக்கொண்ட வரலாற்று மாயங்கள்  நிகழ்த்துமுன்னை உச்சிமுகற  நான் செய்யும் தவங்கள் நிறையவுண்டு..  உனதடிவயிற்றின் குளிர்ச்சியில் அங்கங்கள்  கொஞ்சங்கொஞ்சமாய் வளர உன் வழி பிரசவித்து மார்ப்புப் பாலுண்டு உன் மகவாய் மடியில் தவழும் போராசை  எல்லாப் பிறவியிலும் எனக்குண்டு..  "டேய்" என்றும் "...

My guardian angel

Image
I am thinking again and again Going back and forth on  my thoughts My days My memories How did you come in?  How did you connect deeply?  How did you enter into my personal proximity?  How did I start loving you?  When do I start missing you?  Who you are to me?  Where you were?  Endless question.. No answers.. But I am happy now Feel complete  More productive  More satisfied Love everyone  Able to sense the beauty around me Enjoy living..  You made it possible..  The moment you said you love me My nightmares become dreams My bitterness becomes sweet  My dark becomes light My sadness replaced with happiness Miracles started happening  Stars started falling for me You litted the light on the dying life You are magic happened in my life  You are the synonym of my love You are the eternity I choose upon now You are undoubtedly my angel My guardian angel!

முத்தம் ( மீள் )

Image
மகளின் முத்தம்:-       கன்னத்தோடு கன்னம் ஒட்டி அவள் இமைகளுக்கிடையில் பார்வைதனைச் செலுத்தி அவள் விழி வழி இவ்வுலகம் காண விழைகையில் என் கன்னத்தில் பதிகிறது ஒரு ஈர முத்தம். முத்தம் என்பது என்ன?. ஏன் ஒரு குழந்தை முத்தமிடுகிறது? முத்தத்திற்க்கு முன் பின் நடக்கும் உடற்செயலியல் என்ன? ஏன் முத்தங்கள் பொதுவாக கன்னங்களிலும், உதட்டிலும், புறங்கையிலும், நெற்றியிலும் மட்டும் அதிகமாக இடப்படுகிறது?. குழந்தையின், காதலியின், நட்பின்,பெற்றவர்களின் முத்தங்கள் ஏன் வெவ்வேறு உணர்வுகளை உணரச்செய்கிறது என்ற எண்ணற்ற சிந்தைனைகளை மனம் கடக்கையில் இன்னொரு முத்தம் கிடைக்கிறது எனக்கு. என் மகளின் முத்தம் கிடைத்த  மறுநொடி நான் மரித்துப் போனால் சொர்க்கம் கிடைப்பதாக நான் கனவுகள் கூட காண்பதுண்டு.குழந்தைகளுக்கு முத்தம் பற்றிய அறிவென்பது முத்தம் மூலமாக குழந்தைக்கு கடின உணவுகளை தாயானவள் மென்று ஊட்டிய பழக்கம் (Kiss Feeding) மூலமாக பதிவான பழக்கமென அறிவியல் சொல்கிறது. அப்படியெனில் தாய்தான் முத்தத்தின் ஆதாரம்.என் மகளில் முத்தங்களில் மனைவியும் ஒளிந்திருக்கிறாளோ?. பைபிளின் பழைய அதிகாரத்தில் முத்தங்களைப் பற்றி...

எல்லாவற்றுக்கும் நீதான்!

Image
இரண்டொரு நாட்களாக  கதைக்க நேரமின்றி  சொற்களின் கனத்தை சுமந்துகொண்டே அழைகிறேன் பல தினங்களாக பகிர்ந்த கவிதைகளை நீ இன்னும் படிக்கவுமில்லை பார்க்கவுமில்லை அம்மா வந்து போனது அலுவலக அங்கலாய்ப்புகள் பத்திரிக்கைகளில் படித்தது படம் இரண்டு பார்த்தது அக்கம்பக்க நிகழ்வுகள்  அந்தரங்க புலம்பல்கள் என நிகழ்வுகள்  நிரம்பி முட்டுகையில்  நேரமின்றி இருக்கிறாய் சிந்தை வெடிப்பதற்குள் சீக்கிரம் செவிமடு ஏனெனில் என் எல்லாவற்றுக்கும் காதுகளை காதலோடு  கொடுப்பவள் நீதான். 

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔

Image
வார இறுதி நாட்களில்  உன் நினைவைத் தாங்கி  சில மணிநேரம்  தனித்திருக்கிறேன் இதர நாட்களில்  சில நிமிடங்கள் பெருகும் கண்ணீரை  கனக்கும் இதயத்தை  என்ன சொல்லி  தேற்றுவதெனத்  தெரியவில்லை இதயத்திற்கு  இத்தனையருகில் - ஒரு இழப்பை  துயரத்தினை வலியை  நான் சந்தித்ததேயில்லை நிறைய நல் நினைவுகளை  தந்த நீ இதையும் தந்து  போயிருக்கிறாய் உனது அருகாமை இதயத்தினை இலேசாக்கும் எப்போதும் முதன் முறை உனது இல்லாமை கணமாக்கியிருக்கிறது ஒளிரும்  உனது கண்களை  நெருப்புக்கு  தின்னக் கொடுத்துவிட்டு  இருளில்  அலைகிற, அழுகிற  சாபம் எனக்கு  உனக்கென்ன ஒரே தினத்தில் கடந்து போய்விட்டாய் எனக்கு  ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔

ஒரு கவிதையின் பிறப்பு!

Image
தொண்டை முட்ட உணர்வுகள் மேலிட  வார்த்தைகளற்ற  சூழ்நிலைகளில்  ஒரு இதயம் கசியும் பாடலோ இயற்கை உந்துதலோ  தேவைப்படுகிறது ..  நீயோ  நின் குரலோ கேட்கையில்  கஷ்டமின்றி  நிகழ்ந்துவிடுகிறது  ஒரு கவிதையின் பிறப்பு!

ஏனடா இத்தனை அவசரம்!

Image
இன்று  குளிர்சூடி உதித்த சூரியனும் மழைதாங்கி வீசுகின்ற காற்றும் என்றும் போலன்றி இதயம் கணக்கச் செய்கின்றன நேற்றுவரை  நீயிருந்தாய்  பால்யத்தின் நீட்சியாய் - நீண்ட  பயணத்தின் சாட்சியாய்  இன்று இல்லை  போய் விட்டாய்  காலனழைக்க  காததூரம்  காலத்தின் வீழ்ச்சியாய்! திரும்பி  வரவே முடியாத,   சந்திக்கவே முடியாத  சாவின் தூரம்…  உனக்கு மட்டும்  முன்னதாகவே  நீ நிகழ்த்திக் கொண்ட   முற்றுப்பயணம்! நினைவுகள் அழுத்த புலம்பித் திரிகிறோம் உன் உற்றமும் நட்புச் சுற்றமும் அழுகை குரலோடு அழுத்தும் கேள்விகளோடு அவள்களும் அவன்களும்  அவர்களும்  நெஞ்சம் விம்மி  நேசம் பொருட்டு  கண்ணில் கோர்க்கிறார் கண்ணீர் துளிகள் சில துளிகள் வெளிப்படையாகவும் சில இரகசியமாகவும் உதிர்ந்து  இதயங்கள் உடைபடும் ஓசைகள் கேட்கின்றன எல்லாமும்  என் இதயத்திற்கருகில்   இடைவிடாது கேட்பதுதான்  துயரம் எவ்வளவுதான்  தாங்கும்  இந்த ஒருசோடிக் காதுகளும்  ஒற்றை நெஞ்சமும்! ஏனையோரை  இரவில், இருளில்  அ...

நண்பன் சங்கருக்கு அஞ்சலி..

Image
சரியாக நினைவிலில்லை. சராசரியாக 1993 வாக்கில் இருக்கும்.  திருநெல்வேலி, சுத்தமல்லி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் (மந்தை ஸ்கூல்) ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்ததாய் நியாபகம்.  சரஸ்வதி டீச்சர் வகுப்பு ஆசிரியர். எல்லா நிலை மாணவர்களும் பெரிதாக எந்த வித  பேதமுமின்றி பயின்ற காலம் அது. அப்பொழுதெல்லாம் விவேகானந்த கேந்திரம் நடத்தும் போட்டிகள் அரசுப் பள்ளிகள் அளவில் பிரபலம். பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஒப்புவித்தல் போட்டி , இன்னும் சில போட்டிகள் என வருடா வருடம் நடக்கும். பள்ளியிலிருந்து சில சிறந்த மாணவர்களை தேர்வு செய்து அனுப்பி வைப்பார்கள். நானும் சென்றிருக்கிறேன். நான் சிறந்த மாணவரா??!! அப்படித்தான் நினைக்கிறேன்… ஆனால் பரிசெல்லாம் நமக்கு ரெம்பத் தூரம். போவது வருவதோடு சரி. ஒரு புளி சாதம் கட்டிக்கொண்டு ஜாலியாக போய் வருவதோடு சரி.  தூரமாக சங்கர் அறிமுகமானது அங்கிருந்துதான். எல்லா வருடங்களிலும், நிறைய போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று வருகிற ஒரு பிரைட் ஸ்டுடென்ட் . ஆளும் பிரைட் , அறிவும் பிரைட்.  அவனது ஆளுமை (personality ) பற்றியும் சொல்ல வேண்டும். மொத்தப் பள்ளி...

My Love Light!

Image
You are painting love All inside of my heart All inside of my soul All inside me Blended with all emotions a s colors  And continue painting over the years You have been bringing all the colors to my life  All the time! Today you painted outside too That too at home With tons of love   With tons of happiness With tons of empathy ! This time You brought for everyone  To the kids  To the elders To the grown-ups That too not just with colors! You brought the sky,  You brought the stars You brought the nebula You brought the abundant of the universe  And the galaxy itself As a love pampered package! I have never seen the kid inside me You brought him out today You made him excited You made him cry with joy You made him walk through his childhood You made him realize how real joy feels You have given him the greater old time of his! You break boundaries with love You make the fan following more with love You make your opponents love you even Who you are? wh...

உள்ளேயும் வெளியேயும்!

Image
நீதான்  இன்று, இங்கு  மழையாய்ப் பொழிகிறாய்  நேற்று  கொஞ்சம் மஞ்சள் பூசிய  வெயிலாக  பிறிதொரு பின்னாளில்  கதகதப்புத் தேடும்  குளிராக  கார்கால  இலையுதிர்க்கும்  தென்றலாக  சில நாட்களில்  கொஞ்சம் அரிதாக குழந்தை பயமளிக்கும்  புயலாகவும் நீ! அதே நீதான்  நீதான்  இன்று, இங்கு எப்பொழுதும்  மழையாய்ப் பொழிகிறாய் உள்ளேயும் வெளியேயும்!.

மாயக்காரி! (Magician)

Image
எப்பொழுது விடியுமங்கு  என்றுதான்  இங்கு எனக்கு  தினம் விடிகிறது  காத்திருப்பில்  காலம் கரைகையில்  இதயம் என்னவெல்லாமோ  செய்கிறது  காற்றில் குளிர் வீசும்  இப்பொழுதில்  பறக்கும் ஒற்றைப் பட்டாம்பூச்சியை  உன்னித்துப் பார்த்தவாறே  சிரித்துக் கொண்டிருக்கிறேன்  நேற்று  அவ்வளவு கணமாக ,  காலநிலை போல  இருண்டே இருந்தது  மனமும்  உன்னிடம் பகிர்ந்தும்  அவ்வளவாக குறையவில்லை  இடியாய், மின்னலாய்  அழுத்திய பாரம்  நீ  குரல் வழி அனுப்பிய  இரவு, இறுதிக்  குறுஞ்செய்தியில்  மலையளவு பாரம்  இறகாய் பறந்து போனது  நீ  எனக்காக  எப்பொழுதும்  சொற்களின் வழி  புன்னகையின் வழி  தரிசனங்களின் வழி  மாயங்கள் நிகழ்த்துகிறாய்  மந்திரங்கள் செய்கிறாய்  மகுடிப் பாம்பாய்  என்னை வியாபித்துக் கொல்கிறாய்! ஆயிரம் வண்ணத்து பூச்சிகளையும்  ஒரு  கோடி நட்சத்திரங்களையும்  சில நூறு நாய்குட்டிகளையும்  கொஞ்சம் வண்ண பூக்களையும்  மானசீகமாய்...

வேண்டுதல்!

Image
     இதயம்  நெகிழ்ந்திருக்கும் இப்பொழுதில் மழைக்கு முந்தைய இருள் சூழ்ந்திருக்கும், உனை மறக்கவிடாது   செய்கின்ற  மழை  பொழியக் காத்திருக்கும்  அதிசய இத்தருணம்  முடிவதற்குள் வார்த்தைகள்  முண்டியடித்து  என் மூளைதனை குழப்புகின்ற   நெருக்கடியில் செல்களெல்லாம் நீ தீவிரமாய் வியாபித்து  சிந்தனையை நெருக்கும்  இந்நொடியில் ஒரு நல்லிசை உன்னை விட்டுத் தள்ளியிருக்கும் துயரத்திற்க்கு சிசுவாய் கண்ணீர்  உகுக்கச் செய்க்குகையில்  இம்மையும் மறுமையும் ஏழு பிறப்பும் பிரியத்தால் பேரன்பால் காதலால் காமத்தால் நீயே எனை ஆட்கொள்வாயாக தேவி என எண்ணும்  இம்மணிப் பொழுதில் உயிரின் நுனியில், ஆத்மாவின் அடியாழத்தில் வந்தமர்ந்து கொண்டு உயிரை உருக்கி உளறச் செய்து புன்னகையும் போரட்டமுமாய் பசலையும்  பரிதவிப்புமாய்  மனதை எப்பொழுதும் கொந்தளிக்க செய்வதுமாய் எனைப்படுத்தியெடுக்கிற உன்னிடம்... இனியும் முடியாதென்பதால் மன்றாடி இப்பொழுது கேட்கிறேன் என்னோடு வந்துவிடு என் உயிரைக் கொடுத்தாயினும் உன்னை பார்த்துக் கொள்கிறேன்.

மழை!

Image
இப்பொழுதான்  மழைப் பெய்ந்து ஓய்ந்திருக்கிறது  உன் கண்ணின்  கருவிழிகளாய்  இருட்டிக்கிடக்கிறது வானம்  ஈரத்தரையில்  சிறகு சிலிர்ப்பி  உலர்த்திக்கொள்ளும் குருவிகள்  காண்கின்ற வாழ்வு  எப்பொழுதும் சலிக்காத வரம்  துணிகள் உலர்த்தும்  கொடி கம்பிகளில்  மழைத்துளிகள் நடத்தும்  மாரத்தான் ஓட்டங்களை   கூர்ந்து கவனிப்பின்  ஞானம் நிச்சயம் மின்னலும் ,இடியும்  ஒன்றிணைந்து வருகையில்  கண்களை மூடி  காதுகளைப் பொத்திக்கொண்டு  "அர்ச்சுனா, அர்ச்சுனா" என சிறுவனாகையில்..  யார் அந்த அர்ச்சுனா  என இளைய மகள்  கேட்டக்கூடும் சுவாரஷ்யம்  இன்று உண்டு  நேற்று வாங்கி வந்து  இன்று துளிர் விட்டிருக்கும்  செம்பருத்திச் செடியின் இலையில்  சிரிக்கின்ற மழைத்துளியினை  பார்த்தேன்  பள்ளிவிட்டு வீடு திரும்பும்  மகளிடம் அதைச் சொல்லி  அவள் விழிகள் விரியும்  இரெண்டாம் அதிசயம்  காண வேண்டும்  வாடகை வீட்டின்  முதல்மாடி  சன்னல்களிலிருந்து  மழையை ரசிக்கவு...

"Don't get obsessed by me"

Image
You have been saying  "Don't get obsessed by me" You forget one thing this happened 20 years back. Way old, way deep now.  The Micro love becomes macro and magnanimous! You can't uproot a tree You can't erase the soul's memory You can't change the past You can't change the sun, moon, and the Universe Change is sometimes beyond us You can't change me..Even I can't in this regard You can't change the "you" in me. You have been saying  "Don't get obsessed by me" You are imbibed deep inside me at the DNA level! Which shadows me during my tough times,  Which makes me sleep on sweaty nights blowing a breezy wind,  Which is the most I treasure in my life so far,  Which guards me from my dreamy uncertainty,  Which often the meaning of the life I am living in this crazy world,  Which still keeps me in faith in humanity in a world of selfishness,  Which is one of the ultimate feelings that drove me to be happily alive which of...

நீயே ஒரு திருவிழா!

Image
நீண்ட  வட்டவடிவ அழகு முகம் அடிக்கடி ஆச்சர்யம்  வரையறுக்கும் அலைகள் போல்  இரு புருவங்கள் குழந்தையின்  குதூகலத்தில்  அப்படிப் பேசும்  ஆச்சர்யக் கண்கள்  மெத்தென உப்பிய  அப்பொழுதுதான் வெந்த  வெதுப்பக  ரொட்டிக் கன்னங்கள்  படைப்பின்  பெரும் மெனக்கடல் தெரியும்  சிறு உதடுகள் நாடிப்  பகுதி,  கவனித்தால்  கவனம் சிதறும்  ஆபத்தான  அழகிய பள்ளத்தாக்கு  நீயே  ஒரு திருவிழா  உன் முக தரிசனமே  எனக்கு  அடிக்கடி நிகழும்  அலுக்காத  திருவிழாக் கொண்டாட்டம்!

இம்சை அரசி!

Image
நீ  இரவுகளில் இம்சிக்க தவறுவதேயில்லை பெரும்பாலும்  பகல்களிலும் கூட! நேற்று  முணுமுணுத்துக் கொண்டிருந்த  ஒரு பாடல் வழி  உள்நுழைந்து  என் இதயத்தை  என் இரவை  என் உறக்கத்தை  சிறு சிறு துண்டுகளாய்  பிரித்து பிரித்து  சேர்த்து சேர்த்து  விளையாடிக் கொண்டிருந்தாய்! ஒரு காதல் சினிமாவில்  கதையின் நாயகியாய்  நீதான் தெரிந்தாய்  ஏதோ ஒரு முகத்துடன்  உன் முகத்தை  மூன்று மணிநேரம்  பொருத்தும்  அறிவியல் விந்தையை  இந்தக் காதல்  இந்த பிரியம்  எப்படி நிகழ்த்துகிறதென  குளிரும் இரவில்  ஆச்சர்யத்தில்  உறைந்திருந்தேன்!  ஒரு ரம்மியமான மாலை  மழை தூறும் வானம்  பின்னிருந்து நான் பார்க்கும் யாரோ ஒருத்தி  நெட்டி முறிக்கும் குட்டிப் பூனை  புன்னைகைக்கும் சிறுமி  மேனி தழுவும் சிறு காற்று  எங்கோ கேட்கும் ரம்மிய இசை  தலை சிலிர்ப்பும் நாய் குட்டி  காற்றில் உதிரும் பெரு இலை கால்கள் தழுவும் சிறு அலையென  இப்படி  எல்லா ரூபத்திலேயும் வந்து  இம்சி...

Raining In and Out!

Image
The rain at night is special Very special As Like you with me  At night! When the dark engulfs  The dancing starts! The rain is pouring  With heavy lightening  With heavy thunderstorm  Like a nightclub Rain dancing while lightening blinks on and off Thunderstorm took the drummers' part Where the whole sound of pouring drops  In the different places  Felt like a night party! My body telling me to sleep out Where mind asks me to enjoy  The fun happening out On one thunderstorm  Your thought sparked as a lightning strike Now raining inside too! Though it's usual  This time it felt different As in and out is raining The party is on! You and Rain have similarities!  Or feel the same to me often As it pours unexpectedly by breaking the forecast And often drenched me!  You and Rain have similarities! As you are the beauty of a minority You speak rarely as rain pours You have been shy often as rain too You too have cute many expression...

எப்போதும் அது போதுமெனக்கு

Image
இந்த இரவு  இப்படியே  விடியாது  நீண்டாலென்ன  எனத் தோன்றுகிறது! காதுகளில்  இசையாயும்  மனதில் காட்சிகளாகவும்  நீ முடிவில்லாது  விரிந்து கொண்டே சென்றால்  நான் எவ்வாறு  தூங்குவது?  எங்கனம் தாங்குவது?  இவ்வளவு  அன்பின் பாரம்!  பிடித்த மிட்டாயை  நினைத்துக் கொண்டே அழுந்தும்  குழந்தைபோல நான்  இந்நாட்களில்  உனக்காக!  என் இதயம்  கணத்தும்,  இலகுவாயும்  இந்நாட்களில்  கண்களில்  கண்ணீர் பூக்க  காரணம் நீ! நீ என்னை  சந்திக்க மறுப்பினும்,  இதயத்தினை தராது போயினும்,  திட்டிக்கொண்டே இருப்பினும்,  ஒரேயொரு வரம்  மட்டும் தந்தால்  பிறவிப் பேறடைவேன்  நீ பேணும்,  பேரன்பினைப் பொழியும்  நாய்க்குட்டிகளாய்  எண்ணித் தந்தாலும்  போதும்! உன்னை ஒருதலையாகவாவது காதலிக்க  அனுமதிதான்  அது!  தினமும்  கனவில் வரும்  அந்த ஆதிசிவன்  நீதான் எனக்கு! நீ  உள்ளிருக்கையில்  உனது  வீட்டினைச் சுற்றுதலே  கிரிவலம...

எல்லாம் உதிர்ந்ததும்

Image
நாம் பரஸ்பரம்  அறிவோம்  பன்னிரு ஆண்டுகளாக  உன் பால்யம் பகிர்ந்திருக்கிறாய்  கல்லூரி நாட்கள் கொஞ்சம்  கடந்த துயர்கள் கொஞ்சம்  கனவுகள் கொஞ்சம்  கோபம் கொஞ்சம்  ஆசைகள் கொஞ்சம்  ஆற்றாமைகள் கொஞ்சம்  தவிப்புகள் கொஞ்சம்  சந்தோசம், குதூகலம்  பயணங்கள்  பயணங்களின்  பலன்கள்  என எத்தனையோ  பகிர்ந்திருக்கிறாய்  முடிவில்  நீயும் நானும்  ஒரே ஆத்மாவின்  வேறு உடல்கள்  என் கையில்  சிரிப்பாய்! நீயும் நானும்  ஒரே ஆத்மாவின்  ஓரே மனங்கள்  என்ற பொழுதும்  சிரிப்பாய்! இப்பொழுது  இறகுகளை  உதிர்க்கத் தொடங்கியிருக்கிறாய். எல்லாம் உதிர்ந்ததும்  பறவையாவாய்!