புகைப்படங்களும் வாழ்வும்

புகைப்படங்களும் வாழ்வும் :- புகைப்படங்களும் வாழ்வும் எங்கனம் பொருந்திப்போகின்றன?. எந்த புள்ளியில் புகைப்படங்கள் வாழ்வை இன்றியமையாததாக்குகின்றன?. புகைப்படங்களே இன்றி கழிந்துபோன வாழ்வு எதையாவது இழக்கின்றதா?. இப்படி புகைப்படங்கள் குறித்த சிந்தனைகள் அதிகம் எழுந்து அலைகழித்ததின் விளைவே இந்த பகிர்வு. எனது முதல் புகைப்படம் நான் பிறந்த முதலாம் வருடம் எடுக்கப்பட்டது. அதைப்பார்கின்ற போதெல்லாம் நான் என் குழந்தைப்பருவ கற்பனையில் முழ்கிப்போவேன். நான் எப்படி தவழ்ந்திருப்பேன்?.. கை அல்லது விரல்களை சூப்பியிருப்பேனா? எப்படி ஊர்ந்திருப்பேன்? என எல்லாக்குழந்தைகளும் செய்கின்ற செயல்கள் அனைத்தையும் நான் எவ்வாறு செய்திருப்பேன் என்ற கற்பனை என்னுள் மிகையாகத் தோன்றி மகிழ்விக்கும். நாம் பிறந்து கடந்து வந்த, நமது நினைவில் இல்லாத நாட்களைப் பற்றிய கற்பனைகளை நமக்குள் பூக்கச் செய்கிற சக்தி ஒரு பழைய புகைப்படத்துக்கு உண்டு. அது மட்டுமின்றி அந்த வாழ்வியல் சார்ந்த, காலச்சாரம் சார்ந்த எச்சங்களை, விழுமியங்களை ஒரு புகைப்படம் ஒருநொடிப்பொழுதில் உணர்த்திவிடும். ஆய...