07/05/2015 ன் மாலை



மூக்கின் அருகே வீசுகிறது 
புல்லிலிருந்து பிரிந்து 
காற்றில் கரைகின்ற வாசம் 

சற்று தள்ளியிருக்கும் 
காதின் அருகே 
ரீங்காரமாய் இசைக்கிறது
கூட்டிலிருந்து கிளம்பிவந்து
கூதுகலமாய் பறக்கின்ற
குட்டி ஈயின் இறக்கைகள் 

சாரையாய் ஊறுகின்ற 
எறும்புகளை நினைவுபடுத்துகின்றன 
சாலையில் ஊர்கின்ற 
ஊர்திகள் 

முதலிரவில் சரியும் 
பெண்ணின் முந்தானைபோல் 
மெல்லச் சரிகிறது இரவு 
கருக்களை கவ்விக்கொண்டு  

வலதுபக்க தூரத்தில் 
அமர்ந்திருக்கும் காதலர்களும்
இடதுபக்க தொலைவில்
கூடிக்களிக்கும் குடும்பமும்
ஒரு பக்கம் 
உறங்கும் பூனையும் 
மறுபக்கம் 
சாரை எறும்புகளுமாக
அமர்ந்திருக்கும் எனக்கு 
ஏதோ சொல்வதாய்ப் படுகையில் 

எதிர்கடையிலிருந்து 
வெளிவருகின்ற 
எஜமானி எனக்கு 
பேரழகியாய்த் தெரிவது 
விந்தையில்லை!- ஆனால் 
உற்றுப் பார்க்கிற பூனைக்கு??!!

ஒருவேளை 
குடும்பம் பிரித்து 
கூட்டிவரப்பட்டதாய் இருக்குமோ??
யார்கண்டார்?!
பூனையின் தோள்கள் பற்றி 
புரிந்துகொள்ள ஆசைதான்!
எங்கே நடக்கும்? 

அருகிலிருந்த எறும்பிடம் 
அங்கலாய்த்துப்
புலம்புகையில் 
அரபுமொழி பேசுபவனை 
நான் பார்த்தது போல் 
எனைப்பார்க்கிறது 
பார்க்கிறது எறும்பு!!. 

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔