மிருகதீபம்

மிருகதீபம் :-

நேற்று 
எறும்பு கடித்த இடத்தில் 
இன்று 
சொறிவதைப் போலத்தான்
ஆரம்பிக்கிறது

நத்தைபோல் 
மெல்ல ஊர்ந்து
ஒட்டுண்ணியாகப் 
படர்கையில் 
எண்ணையூற்றிய 
ஜுவாலையாய் 
எரிகிறது 

முதலில் எதிர்ப்பும்
பின்பு எதிர்பார்ப்பும் 
உணர்கையில் 
தொலைந்த இரையை 
கண்டு கடித்த 
காட்டுமிருகமாய் மனம்

நெகிழ்த்தி, பிரழ்த்தி 
அழுத்தி
முத்தத்தால் அணைக்காது 
முடிக்கையில்
அணைந்தாலும் எரிகிறது 
மிருக தீபம் 
இன்னொரு விளக்கிலும்.

Comments

Popular posts from this blog

அவள் பாதங்கள்

காக்கா கவிதை

ஒரு யுகமாகுமே என்ன செய்ய! 😔